
ஆசிரியர்களுக்கான இடமாற்றத்தை இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்
ஆசிரியர்களுக்கான வருடாந்தர இடமாற்றத்தை இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர், ”தேசிய பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட 12,000 ஆசிரியர்கள் இடமாற்றத்தை எதிர்பார்த்துள்ளனர். அதில் பலர் பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் சேவையாற்றியவர்கள் சிலர் நீண்ட காலமாக தூரப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் கற்பிப்பவர்கள்.” என தெரிவித்துள்ளார்.