மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

மகா சிவராத்திரி தினத்தையொட்டி, மத்திய மாகாணத்தில் இயங்கும் தமிழ் பாடசாலைகளுக்கு நாளை 27ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது.

அன்றைய நாளுக்குரிய கல்வி செயற்பாடுகளை மார்ச் மாதம் 1ஆம் திகதி சனிக்கிழமை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)