புளூமெண்டல் ரயில் கடவைக்கு பூட்டு

புளூமெண்டல் ரயில் கடவைக்கு பூட்டு

புளூமெண்டல் ரயில் கடவை புதுப்பித்தல் பணிகளுக்காக நாளை (01) முழுமையாக மூடப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ஒருகொடவத்தையிலிருந்து துறைமுகம் வரை செல்லும் ரயில் வீதியில் உள்ள ப்ளூமெண்டல் ரயில் கடவையில் அவசர புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

அதன்படி, நாளை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை பிரதான வீதி மூடப்படும் என்றும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு இலங்கை ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)