
இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற உறுப்புரிமையை நான் இராஜினாமா செய்வேன்
எமது தேசியத் தலைவரின் காலத்தில் பெண்கள் இரவு 12 மணிக்கு கூட சுதந்திரமாக வெளியில் செல்லும் நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது பெண் எம்.பி ஒருவர் பகலில் கூட வெளியில் செல்ல முடியாத நிலையுள்ளது .
எதிர்வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் பாராளுமன்ற உறுப்புரிமையை நான் இராஜினாமா செய்து அந்த பதவியை பெண் ஒருவருக்கு வழங்குவேன் என யாழ். மாவட்ட எம்.பி.யுமான இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (08) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர், ”எமது தேசியத் தலைவரின் காலத்தில் பெண்கள் இரவு 12 மணிக்கு கூட சுதந்திரமாக வெளியில் செல்லும் நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது பெண் எம்.பி ஒருவர் பகலில் கூட வெளியில் செல்ல முடியாத நிலையுள்ளது. என தெரிவித்தார்.