
தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்காக மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 24 முதல் மார்ச் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை திறந்திருக்கும் எனவும் இன்று (10) முதல் மார்ச் 26 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை கட்டுப்பணம் செலுத்தலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.