
யாழில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள் கொட்டப்படும் செயற்பாட்டை எதிர்த்து கண்டனப் போராட்டம்
யாழ். இணுவில் – காரைக்கால் பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள் கொட்டப்படும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் போராட்டம் ஒன்று இன்று (09) முன்னெடுக்கப்பட்டது.
இன்று (09) முற்பகல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் குறித்த கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதியில் நல்லூர் பிரதேச சபையால் கழிவகற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதீபன்

CATEGORIES Sri Lanka

