
பிள்ளையான் கைது
கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (08) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான், மட்டக்களப்பில் உள்ள கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.

