தனுஷை தவிர எல்லாருமே என்னை அசிங்க படுத்திருக்காங்க – வித்யுலேகா

தனுஷை தவிர எல்லாருமே என்னை அசிங்க படுத்திருக்காங்க – வித்யுலேகா

கெளதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் நீதானே என் பொன்வசந்தம்.

இப்படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா.

கடந்த ஆண்டு லாக்டவுன் சமயத்தில், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் உடன் வித்யுலேகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று திருமணம் நடந்து முடிந்தது.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் உருவ கேலி குறித்தும் சினிமா வாய்ப்பு குறித்தும் அவர் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” நான் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டதாக பலர் வதந்திகளை கிளப்பி வருகின்றனர்.

இதனால் எனக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

பொதுவாக பல படங்களில் எனது உருவத்தை வைத்து உருவகேலி செய்யும் காமெடி காட்சிகளை தான் எடுத்தனர்.

ஆனால், தனுஷ் இயக்கி நடித்த ப. பாண்டி படத்தில் மட்டும் தான் அப்படி எந்தவொரு சீனோ அல்லது வசனமோ இல்லை. மற்ற அனைவரும் பாடி ஷேமிங் தான் பண்ணார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )