
நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு முன்பாக உள்ள, பருத்தித்துறை வீதியில் அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகமொன்றுக்கு எதிராக நேற்று (20) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமான குறித்த கவனயீர்ப்பு போராட்டம், யாழ்ப்பாணம் மாநகர சபை வரை பேரணியாக முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளரைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

