
துணை வைத்திய நிபுணர்கள் பணிப்புறக்கணிப்பு
இணை சுகாதார பட்டதாரிகளுக்கு ஏற்பட்ட அநீதி, பதவி உயர்வு பிரச்சினைகள் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை மையமாக வைத்து, துணை வைத்திய சேவைகளைச் சேர்ந்த ஆய்வக விஞ்ஞானிகள் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்கள் இன்று (27) காலை 8 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
துணை வைத்திய தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்ததாவது, தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், வேலை நிறுத்தத்தை தொடர்ந்து நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ”எதிர்காலத்தில் இந்த வேலை நிறுத்தத்திற்கு துணை வைத்திய சேவைகளைச் சேர்ந்த மற்ற தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம்.
இதற்கிடையில், வைத்தியர்களின் கூடுதல் பணி மற்றும் விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவுகளை குறைப்பது தொடர்பான சரியான சுற்றறிக்கையை ஒரு வாரத்திற்குள் வெளியிட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

