
ஈரானில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப இந்தியா உதவிகரம்
இஸ்ரேல் ஈரான் போர்ப்பதற்ற சூழலில் , ஈரானில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு உதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் முறையான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டது.
மேலும் ஈரானில் உள்ள நேபாள நாட்டினருக்கும் இந்தியா தனது உதவியை வழங்குகிறது.
விசேட திட்டத்தின் கீழ் இரு அண்டை நாடுகளின் குடிமக்களையும் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது
CATEGORIES Sri Lanka

