
பாடசாலை மாணவிகள் குழந்தை பெற்றுக்கொண்டால் ஊக்கத்தொகை
பாடசாலை மாணவிகள் கர்ப்பமானால் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் மக்கள் தொகையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டது போல, பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
கருக்கலைப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் ரஷ்யா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

