ஹம்பாந்தோட்டை பறவைகள் சரணாலய உரிமையாளரின் விளக்கமறியல்  நீடிப்பு

ஹம்பாந்தோட்டை பறவைகள் சரணாலய உரிமையாளரின் விளக்கமறியல் நீடிப்பு

நாரஹேன்பிட்ட பகுதியில் விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை நாகரவெவ பறவைகள் சரணாலய உரிமையாளரை, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் குறித்த சந்தேக நபர் கடந்த 17 ஆம் திகதி நாரஹேன்பிட்ட பகுதியில் விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )