
எசல பெரஹெராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை
வருடாந்த எசல பெரஹெராவை முன்னிட்டு கண்டிக்குச் செல்லும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 8 விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஓகஸ்ட் 4 முதல் 8ஆம் திகதிவரை கொழும்பு கோட்டை, கண்டி, மாத்தளை, நாவலப்பிட்டி மற்றும் பொல்கஹவெல உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் விசேட ரயில் சேவைகள் தினமும் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.


