
நிஷாந்த உலுகேதென்னவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை ஓகஸ்ட் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.
கடற்படையின் புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்ட காலப்பகுதியில், பொத்துஹெரவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

