
எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்புகொழும்பு-பெலியத்த ரயில் பாதையில் சம்பவம்
மருதானையில் இருந்து பெலியத்த நோக்கிச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
களுத்துறை வடக்கு பிரிவிற்குட்பட்ட கொழும்பு-பெலியத்த ரயில் பாதையில் 23வது மைல் அருகே நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.
களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ,உயிரிழந்தவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ,
CATEGORIES Sri Lanka

