இந்தோனேசியாவில் பாடசாலை இடிந்த விபத்து ; 37 பேர் பலி

இந்தோனேசியாவில் பாடசாலை இடிந்த விபத்து ; 37 பேர் பலி

இந்தோனேசியாவின் சிடோர்ஜோ நகரில் பாடசாலை கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த 29-ந்திகதி இடிந்து விழுந்தது.

இதில் இடிபாடுகளில் சிக்கிய 65 மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. 14 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். சிலர் உயிருடன் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.

இதையடுத்து பலி எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 26 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, இன்று காலை நிலவரப்படி 37 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 104 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர் என்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )