
சாவகச்சேரியில் 25 கிராம் ஹேரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவற்குழியில் 25 கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 36 வயதுடைய குறித்த நபரையும் கைப்பற்றப்பட்ட போதை பொருளையும் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் .
அப்பகுதிகளில் அண்மைக்காலமாக போதை பொருள் பாவனைகள் அதிகரித்து வரும் நிலையில் நாவற்குழி பொலிஸ் பொறுப்பதிகாரி C.I.கோணேஸ்வரன் தலைமையில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

