மீனவ சமூகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய மீனவர் ஓய்வூதியத் திட்டம்

மீனவ சமூகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய மீனவர் ஓய்வூதியத் திட்டம்

1990 ஆம் ஆண்டு 23 ஆம் இலக்க ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டச் சட்டத்தின்படி, 2025 நவம்பர் 21 முதல் மீனவ சமூகத்திற்காக புதிய மீனவர் ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், 60 வயதை எட்டும்போது இந்த புதிய மீனவர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தைப் பெறலாம், மேலும் இதன் விசேட அம்சம் என்னவென்றால், பயனாளி ஓய்வு பெறும்போது இறந்தால், அவரது மனைவி ஓய்வூதியத்தைப் பெறலாம்.

மேலும், 60 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு வயது எல்லையிலும் ஓய்வூதியத்தை அதிகரிப்பது இந்த மீனவர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயனாளி பெறும் மற்றொரு விசேட சலுகையாகும்.

எந்தவொரு காரணத்திற்காகவும் பங்களிப்பாளர் முழு பங்களிப்பையும் செலுத்த முடியாத சந்தர்ப்பங்களில், செலுத்தப்பட்ட பங்களிப்பு 25% முதல் 74% வரை இருந்தால், பங்களிப்பு தொகை பங்களிப்பு செலுத்தும் காலத்தின் முடிவில் நிகர பங்களிப்புத் தொகையின் அடிப்படையில் சபையால் நிர்ணயிக்கப்பட்ட வட்டித் தொகையுடன் பங்களிப்பாளருக்குத் திருப்பித் தரப்படும்.

மேலும், இந்தத் திட்டத்தில் பங்களிக்கும் மீனவர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு முன்பு நிரந்தர/பகுதி ஊனம் ஏற்பட்டால் ஊனமுற்றோர் சலுகைகளைப் பெறுவதற்கான வாய்ப்பையும் இந்தத் திட்டம் வழங்குகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )