உயர்தர பரீட்சையையொட்டி நுகேகொட பேரணியின் சில ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன

உயர்தர பரீட்சையையொட்டி நுகேகொட பேரணியின் சில ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து பல எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட “மகா ஜன ஹாண்ட” பேரணி, இன்று பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடையில் ஆரம்பமாவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட போது பேரணியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது குறித்து பொலிஸார் ஒரு அறிக்கையை வெளியிட்டனர் .

க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று (21) காலை 08.30 மணி முதல் 11.40 மணி வரையிலும், பிற்பகல் 02.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையிலும் பேரணி நடைபெறும் வளாகத்தைச் சுற்றியுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

எனவே, வளாகத்திற்குள் மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துமாறு ஏற்பாட்கொண்டனர் கொன்றனர்.

மேலும், பேரணியால் பரீட்சைகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கும், பரீட்சைகளை முடிந்து வெளியேறும் மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படக் கூடாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

அதன்படி, கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வளாகத்திற்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை அகற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர் .

இன்றைய பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தி ,, சர்வஜன பலய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகியவை பங்கேற்காது எனவும் கூறப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )