பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசு மற்றும் இந்திய மக்களிடமிருந்து நன்கொடை                                                              இன்று அதிகாலை கட்டுநாயக விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது

பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசு மற்றும் இந்திய மக்களிடமிருந்து நன்கொடை இன்று அதிகாலை கட்டுநாயக விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது

நாட்டை பாதித்த பாதகமான வானிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிப் பொருட்களை ஏற்றி வந்த இந்திய விமானப்படையின் C-130 விமானம் இன்று (29) அதிகாலை 01.45 அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்திய அரசு நன்கொடையாக வழங்கிய சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இவ்வாறு கொண்டு வரப்பட்டன.

இந்திய அரசு வழங்கிய இந்த நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்வில், மைத்ரே குல்கர்னி, ஆலோசகர் (வளர்ச்சி ஒத்துழைப்பு) லெப்டினன்ட் கர்னல் மந்தீப் சிங் நேகி (உதவி பாதுகாப்பு ஆலோசகர்) மற்றும் இந்திய விமானப்படை அதிகாரிகள் குழு கலந்து கொண்டனர்.

இந்த உதவியைப் பெற இலங்கை விமானப்படையின் தலைமைத் தளபதி ஏர் வைஸ் மார்ஷல் லசிதா சுமனவீர உட்பட விமானப்படை அதிகாரிகள் குழு ஒன்று கலந்து கொண்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )