கல்முனை நகரில் திறக்கப்படவுள்ள அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் அரச மருந்தக வலையமைப்பின் 68வது கிளை

கல்முனை நகரில் திறக்கப்படவுள்ள அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் அரச மருந்தக வலையமைப்பின் 68வது கிளை

மக்களுக்கு நியாயமான விலையில் உரிய மருந்துகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் (SPC) கல்முனை கிளை டிசம்பர் 30 ஆம் திகதி பொதுமக்களுக்குத் திறக்கப்படஉள்ளது.

இது அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் அரச மருந்தக வலையமைப்பின் 68 வது புதிய அரச மருந்தகக் கிளையாகும், மேலும் எண் 302, பிரதான சாலை, கல்முனையில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் சிந்தனையின் அடிப்படையில், மக்களின் தேவைக்கேற்ப ehL முழுவதும் அரச மருந்தகக் கிளைகளை நிறுவுவதற்கான விசேட திட்டத்திற்கு ஏற்ப இந்த புதிய மருந்தகக் கிளையைத் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, மேலும் புதிய கிளை டிசம்பர் 30 ஆம் தேதி பிற்பகல் 2.00 மணிக்கு சுப நேரத்தில் திறக்கப்படும்.

அனுபவம் வாய்ந்த மருந்தாளுநர்களின் சேவைகளின் கீழ், நியாயமான விலையில் உயர்தர மருந்துகளை பெற்றுக்கொள்ள பொதுமக்களுக்கு உதவுகிறது, மேலும் வயதானவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், 05 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கான அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு 5% சிறப்பு தள்ளுபடியுடன் மருந்துகளை வழங்குவது இங்கு குறிப்பிடத்தக்கது.

நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தி மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தர ஆய்வகத்தில் மருந்துகள் நான்கு நிலைகளில் சோதிக்கப்படுகின்றன, இதனால் பொதுமக்கள் நம்பிக்கையுடன் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கை மக்களுக்கு நியாயமான விலையில் உயர்தரமான, மருந்துகளை வழங்குவதை முதன்மையான நோக்கமாகக் கொண்டு, பேராசிரியர் சேனக பிபிலே அவர்களால் 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனம், 54 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நாட்டு மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகளை வழங்கி வருகிறது.

கல்முனை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், டாக்டர் மனுஜ் சி. வீரசிங்க, நிர்வாக இயக்குநர் மேவன் சம்பத் சுபசிங்காராச்சி, அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபன அதிகாரிகள், கல்முனைப் பகுதியிலுள்ள வர்த்தகர்கள் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )