
இலங்கை வருகின்றார் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்
கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளார்
மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வரும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எதிர்வரும் புதன்கிழமை வரை நாட்டில் தங்கியிருந்து பல்வேறு முக்கிய சந்திப்புகளில் பங்கேற்க உள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பங்குதாரர்களை சந்தித்து, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து கலந்துரையாடவுள்ளார்
அதேபோல், சமீபத்தில் இலங்கையை தாக்கிய ‘திட்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார்.

