
ஈரான் அரச வானொலி நிலையம் மீது தாக்குதல்
ஈரானிய அரச வானொலி நிலையம் மீது இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஈரானின் தெற்கு துறைமுக நகரில் அமைந்துள்ள குறித்த வானொலி நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
CATEGORIES World News

