
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு வருகை
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்டோ கந்தா உத்தியோகப்பூர்வ பயணமாக இலங்கைக்கு வந்துள்ளார்.
அவர் நேற்று இரவு சுமார் 11.40 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து சிறப்பு விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தார்.
இந்தப் பயணத்தின் போது இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

