
இன்று காலை முதல் மீண்டும் GMOA வைத்தியர்களின் வேலைநிறுத்தம் ஆரம்பம்
இன்று (04) காலை 8 மணி முதல் மீண்டும் நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கபடுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தம் நிறைவடையும் காலம் குறித்து இன்று நடைபெறவுள்ள மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களின் இடமாற்றச் செயல்முறையை அரசியல்மயமாக்குவதற்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த வாரத்தில் ஏற்கனவே இரண்டு சந்தர்ப்பங்களில் வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தது.
தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் உரிய அதிகாரிகளின் எதிர்மறையான பதில்களைக் கருத்திற்கொண்டு, மீண்டும் இவ்வாறான வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்ததாக வைத்தியர் சமில் விஜேசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
CATEGORIES Sri Lanka

