
ஈரானிய கடற்படை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் உயிரிழப்பைஈரான் உறுதிப்படுத்தியது
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, தனது கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர் சபையின் தலைவர் பெஹ்னாம் ரெசாயியின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி ரெசாயியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலின் அறிக்கையை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிராந்திய நாடுகளின் உளவுத் தகவல்களைச் சேகரிப்பதில் அவர் முக்கிய பொறுப்புகளை வகித்ததாகக் கூறப்படுகிறது.
அதேபோல், பல்வேறு உளவு அமைப்புகளுடனான ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்கு ரெசாயி தலைமை தாங்கியதாகவும் சர்வதேச ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

