
95,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கப்பல் இன்று நாட்டிற்கு
இலங்கைக்குத் தேவையான புதிய மசகு எண்ணெய் ஏற்றிவரும் கப்பல் இன்று நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூரா நெத்திகுமாரகே இது குறித்துத் தெரிவிக்கையில்,
95,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிய கப்பல் இன்று நாட்டை வந்தடைய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய வருகையைத் தொடர்ந்து, மேலும் பல எரிபொருள் கப்பல்கள் நாட்டிற்கு வரவிருக்கின்றன:
நாளை (ஏப்ரல் 27) -9,500 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல்.
ஏப்ரல் 28 ஆம் திகதி -36,000 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல்.
இந்த புதிய இறக்குமதிகளின் மூலம், எதிர்வரும் ஜூன் மாதம் இறுதி வரை நாட்டின் தேசிய எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான போதியளவு எரிபொருள் கையிருப்பில் இருக்கும் என மயூரா நெத்திகுமாரகே பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

