இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலைகள் அதிகரிப்பு

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலைகள் அதிகரிப்பு

இலங்கையில் அனைத்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலைகளும் மே 1 ஆம் தேதி முதல் கணிசமாக அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) 1.25 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய வரி திருத்தம், தனிநபர் மற்றும் பதிவு செய்யப்பட்ட இறக்குமதியாளர்களுக்கிடையிலான வரிவிதிப்பு நடைமுறைகளை சீரமைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த மாற்றம் நுகர்வோருக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக தனிநபர் இறக்குமதியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்த இந்த வரி, தற்போது அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சுங்க அனுமதி நிலையத்திலேயே அறவிடப்படுகிறது.

விலை உயர்வின் அடிப்படையில், சிறிய ரக வாகனங்களின் விலை 130,000 ரூபாய் முதல் 215,000 ரூபாய் வரையிலும், நடுத்தர ரக வாகனங்களின் விலை 345,000 ரூபாய் முதல் 510,000 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது.

மேலும், Toyota Land Cruiser போன்ற உயர் ரக வாகனங்களின் விலை 980,000 ரூபாய் முதல் 1.45 மில்லியன் ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கு புவிசார் அரசியல் நிலைமைகள் மற்றும் சர்வதேச விலையேற்றங்களும் இந்த விலை உயர்வுக்கு காரணமாக உள்ளதாகவும், இதனால் எதிர்காலத்தில் வாகன சந்தை தேவையில் கூடுதல் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )