
வரவு செலவுத்திட்டத்தில் கூட வறுமை குறித்த சரியான தகவல்கள் இல்லை
இந்நாட்டில் வறுமை தொடர்பான தரவுகளோ சரியான புள்ளிவிபரங்களோ இல்லாமல் அஸ்வெசும கொடுப்பணவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், தகுதியான சிலருக்கு இந்த நிவாரணம் கிடைக்காமல் இருப்பதும், தகுதி உள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதும் நடந்துள்ளன. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வறுமை ஒழிப்பு தொடர்பான தரவுகளைத் துல்லியமாக தெரியாமலயே தனது வரவு செலவுத் திட்ட உரையினை நிகழ்ந்தினார் என்பதை நான் பொறுப்புடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
LIRNE asia கணக்கெடுப்பின்படி, இந்நாட்டில் ஏழ்மையடைந்தோர் 30 இலட்சம் முதல் 70 இலட்சம் வரை காணப்படுகின்றனர் என சுட்டிக்காட்டுகின்றது. மூன்றில் ஒரு பகுதியினர் அதாவது 40 இலட்சம் பேரளவில் ஏழ்மையடைந்தோர் தரப்பில் அதிகரித்துள்ளனர். இவ்வாறான முரண்பட்ட தரவுகளுடன் வரவுசெலவுத் திட்டத்தை முன்வைக்க முடியாது. தொகை மதிப்பு புள்ளிவிபர திணைக்களத்திடம் கூட இந்த விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.