ஜெர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு 

ஜெர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு 

மாத்தளை மாவட்டத்தில்  உள்ளூராட்சி  சபைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட  ஜெர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் பெண் வேட்பாளர் சமர்பித்த பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தில் முரண்பாடுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து, வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக மாத்தளை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆசிரி எரங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை குடியுரிமை பெற்ற இந்த பெண்  உள்ளூராட்சி  சபைத் தேர்தலில் நுழைந்த முதல் வெளிநாட்டவர் என்ற பெருமையைப் பெற்றார். ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்பாளராக கலேவெல பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஜெர்மனிய பெண் புதன்கிழமை (18) செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)