
சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இராஜினாமா
ஜனாதிபதியின் மன்னிப்பை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதியொருவர் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க தமது பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்து இராஜினாமா கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

