
இலங்கையில் அடுத்த வாரம் முதல் ஸ்டார்லிங்க்
இலங்கையில் ஸ்டார்லிங்க் அடுத்த வாரம் செயல்படத் தொடங்கும் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஸ்டார்லிங்க் சேவைகளைப் பெற 12 ஆரம்ப பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த வாரம் அவர்களுக்கு உபகரணங்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) பந்துல ஹேரத் தெரிவித்தார்.

