
நாளை முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம் ஆரம்பம்
தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நாடு முழுவதும் செயற்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாரத்திற்கான தினவினாக்கள் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளன:
- ஜூலை 7 – வீதி விபத்து தடுப்பு நாள்
- ஜூலை 8 – பணியிடம் தொடர்பான விபத்துகள்
- ஜூலை 9 – வீடு மற்றும் முதியோர் இல்லங்களில் ஏற்படும் விபத்துகள்
- ஜூலை 10 – நீரில் மூழ்கும் விபத்துகள்
- ஜூலை 11 – பாடசாலைகள், முன்பள்ளிகள், பராமரிப்பு மையங்களில் ஏற்படும் விபத்துகள்
இந்த வாரத்தின் முக்கிய நோக்கம், விபத்துகள் குறித்த விழிப்புணர்வை வளர்த்தல், அபாய நிலைகளை கண்டறிதல், மற்றும் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என அமைச்சு தெரிவித்துள்ளது.

