
பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க தீர்மானம்
பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
மேலும் அவர், ”5,000 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டது.பொலிஸ் துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது செயற்படுத்தப்படுகின்றது.”என தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka

