
முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உட்பட ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உட்பட ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெள்ள நிவாரணம் வழங்குவதாகக் கூறி எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான ரூ. 6.1 மில்லியனுக்கும் அதிகமான தொகையை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ,அப்போது பெட்ரோலியத் துறைக்குப் பொறுப்பான அமைச்சராக அனுர பிரியதர்ஷன யாப்பா உட்பட ஆறு பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன் ஒப்படைக்கப்பட்டன.
குற்றம்சாட்டப்பட்டவர்களை தலா ரூ.100,000 ரொக்கப் பிணையிலும் தலா ரூ. 1மில்லியன் மதிப்புள்ள இரண்டு பிணைப் பிணைக்களிலும் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டதுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கைரேகைகளை பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு அக்டோபர் 1 ஆம் திகதி முழுமையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டது.

