
இம்முறை அருகம்பேயில் Made in Sri Lanka வர்த்தகக் கண்காட்சி
தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை (NEDA) ஏற்பாடு செய்யும் ‘‘Made in Sri Lanka’’ வர்த்தகக் கண்காட்சி, ஆகஸ்ட் 29, 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை, பிரபலமான சுற்றுலாத் தலமான அம்பாறை மாவட்டத்தில் உள்ள அழகிய அருகம்பே கடற்கரையை மையமாகக் கொண்டு நடைபெற உள்ளது.
தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையினால் (NEDA) வருடாந்தம் நாடு பூராகவும் “Made in Sri Lanka” வர்த்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்து, உள்நாட்டு தொழில் முனைவோருக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

