
தலாவ-மிரிகம சந்தியில் லொறி – வேன் மோதி மூவர் உயிரிழப்பு
குருநாகல்-அனுராதபுரம் பிரதான வீதி, தலாவ-மிரிகம சந்தியில் லொறி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை இந்த விபத்து இடமபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.
வேனில் பயணித்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் நால்வர் காயமடைந்தனர்.
வேன் ஓட்டுநர் , லொறி ஓட்டுநர் உட்பட காயமடைந்த ஏழு பேர் தலாவ மற்றும் அனுராதபுர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
CATEGORIES Sri Lanka

