இஸ்ரேலின் சுற்றுலா நகரமான எய்லாட்டில் யேமன் ட்ரோன் தாக்குதல்  22 போ் படுகாயம்

இஸ்ரேலின் சுற்றுலா நகரமான எய்லாட்டில் யேமன் ட்ரோன் தாக்குதல் 22 போ் படுகாயம்

இஸ்ரேலின் தென் சுற்றுலா நகரமான எய்லாட்டில் யேமன் ஏவிய ட்ரோன் தாக்குதலை 22 போ் படுகாயமடைந்தனா்.

செங்கடலையொட்டி அமைந்துள்ள எய்லாட் நகரில், யேமன் ஏவிய ட்ரோன் இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பையும் தாண்டி விழுந்துள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்த 22 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவா்களில் 26 மற்றும் 60 வயதுடையவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரின் மையப் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகைத்தரும் இடத்தில் எமன் ஏவிய ட்ரோன் விழுந்ததால் அதிக சேதம் ஏற்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமனில் இருந்து ட்ரோன் ஏவப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும் அந்த நாட்டில் பெரும்பான்மையாக ஆட்சி செலுத்திவரும் ஹவுதி கிளா்ச்சியாளா்கள் இதற்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .

காஸா – இஸ்ரேலின் போரில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது யேமனின் ஹவுதி அமைப்பினர் தாக்குதல் நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )