
செப்டெம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை நாளை
செப்டெம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை நாளை (26) ஆம் திகதி வழங்கப்படுமென நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி ,நாளை சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனவும் நாளை முதல் பயனாளிகள் தங்கள் முதியோர் உதவித்தொகையை வங்கிக் கணக்கு மூலம் பெற முடியும் என சபை தெரிவித்துள்ளது.
இம்முறை 602,852 பயனாளிகளிடையே
3,014,260,000 ரூபாய் உதவித் தொகை பகிர்ந்தளிக்கப்படுவதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

