
கலா ஓயாவின் வான்கதவுகள் திறப்பு
நீர்மட்டம் அதிகரித்தமையினால் கலா ஓயாவின் 2 வான்கதவுகள் இன்று (04) 4 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் கலா ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

