
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களம், பல மாகாணங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ‘அம்பர்’ எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்று (12) நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு, வடமேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடி மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய சேதங்களை குறைக்கும் வகையில் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

