
கச்சத்தீவு கடல் பகுதியில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 237 புறாக்களுடன் மூவர் கைது
யாழ்ப்பாணம் கச்சத்தீவு கடல் பகுதியில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 237 புறாக்களுடன் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.
கடற்படையினர் நேற்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, நெடுந்தீவைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களுடன் 237 புறாக்கள் மற்றும் ஒரு டிங்கி படகும் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட புறாக்கள் மற்றும் படகுடன் சந்தேக நபர்கள் சட்ட நடவடிக்கைக்காக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
CATEGORIES Sri Lanka

