டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை நாட்டில் 29,589 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அந்தப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் டாக்டர் பிரசீலா சமரவீர, 2026 மே 18 நிலவரப்படி டெங்கு காரணமாக 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், டெங்கு பரவல் அதிக அபாயம் காணப்பட்ட 39 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாகாணங்களின் அடிப்படையில் மேற்கு மாகாணத்தில் அதிகளவிலான நோயாளிகள் பதிவாகியுள்ளது, தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மாவட்டங்களின் அடிப்படையில் நாட்டின் அனைத்து 25 மாவட்டங்களிலும் டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அதேவேளை, பள்ளிகள், அரசாங்க நிறுவனங்கள், பணியிடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக பூச்சியியல் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் டாக்டர் பிரசீலா சமரவீர தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )