பெல்ஜியத்தின் இலங்கையர்கள் சங்கத்தினால் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நிதி உதவி

பெல்ஜியத்தின் இலங்கையர்கள் சங்கத்தினால் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நிதி உதவி

பெல்ஜியத்தின் இலங்கையர்கள் சங்கத்தினால், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையையும், அனர்த்தத்துக்குள்ளான நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 17,600 யூரோ நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த நிதியை பெல்ஜியத்தின் இலங்கையர்கள் சங்க உப தலைவர் நிமல் ஜயகொடி, கடந்த 19ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.

டித்வா சூறாவளி காரணமாகப் பாதிப்புக்குள்ளான மாத்தளை, கம்மடுவ தமிழ் மகா வித்தியாலயத்தின் புனரமைப்புப் பணிகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் ஹேமந்த பெரேராவின் ஒருங்கிணைப்புடன், பெல்ஜியத்தின் இலங்கையர்கள் சங்கத்தின் பங்களிப்பு இதற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்காக பெல்ஜியத்தின் இலங்கையர்கள் சங்கம், பெல்ஜியத்தில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் பெல்ஜியத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவற்றின் ஆதரவும் கிடைத்துள்ளது.

மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் ஹேமந்த பெரேரா மற்றும் பெல்ஜியத்தின் இலங்கையர்கள் சங்கத்தின் உறுப்பினர் தரங்கா சுபாஷினி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )