அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள் !

அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள் !

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,863 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

நேற்றைய தினம் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 209 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை, இதுவரையில் தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 2,113 முறைப்பாடுள் தொடர்பில் தீர்வு கண்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எஞ்சிய 750 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )