ரணில், சஜித், அநுர, திலித் விவாதம் ரூபவாஹினியில் இன்றிரவு 10 மணிக்கு !

ரணில், சஜித், அநுர, திலித் விவாதம் ரூபவாஹினியில் இன்றிரவு 10 மணிக்கு !

இலங்கையின் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்கும் தலைப்பிலான அரசியல் உரையாடல் ‘கரட்ட கர’ நிகழ்ச்சி தேசிய தொலைக்காட்சியான ரூப வாஹினியில் இன்றிரவு (09) ஒளிபரப்பாகவுள்ளது.

ஜனாதிபதி சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன், ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்
பிரேமதாச சார்பில் எரான் விக்கிரமரத்னவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க சார்பாக பேராசிரியர் அனில் ஜயந்தவும் சர்வ அதிகார கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர சார்பாக பாராளு மன்ற உறுப்பினர் காமினி வேலெபாடவும் கலந்துகொள்கின்றனர்.

இந் நிகழ்ச்சியில், நாட்டை கட்டியெழுப்பும் பொருளாதார கொள்கை தொடர்பாக வாதங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்படவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )