நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்த வேண்டும் !

நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்த வேண்டும் !

நாட்டு மக்களிடம் நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

‘மக்கள் ஜனாதிபதியை மாத்திரம் மாற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை.

நாட்டில் பெரும் ஊழல்வாதிகளும், மோசடிக்காரர்களும் நாடாளுமன்றில் இருக்கிறார்கள்.

சிறைக்கைதிகளை துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தியவர்களும் நாடாளுமன்றில் இருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்துக்குக் கத்தியையும், மிளகாய்த் தூளையும் கொண்டு சென்றவர்களும் நாடாளுமன்றில் இருக்கிறார்கள்.

அவ்வாறானவர்களை வெளியேற்றி நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோருகிறார்கள் ‘என்று அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )