அளவுகோல் இன்றி உயரமா, குள்ளமா என பார்த்து நாம் தொழில் வழங்குவதில்லை

அளவுகோல் இன்றி உயரமா, குள்ளமா என பார்த்து நாம் தொழில் வழங்குவதில்லை

தொழில் வழங்குவதில் உரிய செயன்முறையொன்று அரசிற்கு இருப்பதாகவும், இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் போன்று உயரமா குள்ளமா என பார்த்து தொழில் வழங்கப்படமாட்டாதெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது எழுப்பிய கேள்விக்கு 18 ஆம் திகதி பதில் வழங்கிய போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

சுதந்திர கல்வியில் மாணவர்களுக்கென மேற்கொள்ளப்படும் செலவுகள் பொதுவான கல்வியில் ஆரம்பநிலை மற்றும் இரண்டாம் நிலை கட்டங்களுக்கென வேறாக தரவுகள் இல்லை. இந்த இரு மட்டங்களிலும் பொதுவாக ஒரு மாணவருக்கென 2020ம் ஆண்டிலிருந்து 2025ம் ஆண்டு வரை கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறு செலவிடப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டில் 60,136. 2021ம் ஆண்டில் 63,498. 2022ம் ஆண்டில் 75,096. 2023ம் ஆண்டில் 87,594. 2024ம் ஆண்டிற்கென 97,784. 2025ம் ஆண்டிற்கென மதிப்பிடப்பட்ட ஒரு மில்லியன் 15,715 ரூபா தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் நிலைக்கான ஒதுக்கீடு ஒவ்வொரு பாட விதானங்களுக்கமைய மாற்றமடையும். பொதுவாக உயர் கல்வியைத் தொடரும் மாணவர் ஒருவருக்கென நான்கு இலட்சத்து ஐயாயிரத்து முன்னூற்று பதின்மூன்று ரூபா செலவிடப்படுகிறது. இந்த தகவல்கள் தொடர்ச்சியான செலவுகளுக்கமையயே முன்வைத்துள்ளோம்.

சுதந்திர கல்வியைப் பெறும் ஒரு மாணவனுக்கென வருடாந்தம் அரசாங்கம் செலவிடும் நிதிச் சுமை தொடர்பில் கல்வியமைச்சு அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு ஒன்று இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

பல்வேறு பாட விதானங்களில் பட்டப்படிப்பை நிறைவு செய்து தொழில் தேடுவதற்கு செலவிடும் காலம் தொடர்பில் பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் வருடாந்தம் இடம்பெறும் ஆய்வு அல்ல. பல்கலைக்கழக கல்வியில் உள்வாரி, வெளிவாரி மற்றும் நீண்டகாலம் என்ற அடிப்படையில் வௌ;வேறாக தகவல்களை பெற முடியாதுள்ளது.

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு இருக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய பட்டதாரிகளுக்கு வேலையின்மைக்கு ஒரு காரணத்தை கூற முடியாதென்பது இதனூடாக தெளிவாகிறது. பல்வேறு காரணங்கள் உள்ளன. பொதுவான கல்வியில் காணப்படும் சந்தர்ப்பங்கள் இதில் கூடுதல் தாக்கம் செலுத்துகின்றன. தொழில் வாய்ப்புக்களைப் பெறும் போது ஒருவருக்கொருவர் காணப்படும் சமூக தொடர்புகளுக்கமையவும் தொழில்களை பெறுவதற்கான சந்தர்ப்பம் தீர்மானிக்கப்படுகிறது. விசேடமாக தனியார் துறையில் வேலையின்மை என்பது ஒரு சிக்கலான பிரச்சினையாகும். இதில் பல்வேறு காரணங்கள் தாக்கம் செலுத்துகின்றன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் புதிய பட்டதாரிகளுக்கென தொழிற்துறை வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கென தொழில்சார் வழிகாட்டல் குழுக்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. பல்கலைக்கழகங்களில் காணப்படும் தொழில்சார் வழிகாட்டல் பிரிவுகளின் பணிப்பாளர் அதன் பிரதானியாக செயற்படுகின்றார். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொழில்சார் வழிகாட்டல் ஆலோசனை வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பட்டதாரி மாணவர்கள் மற்றும் கைத்தொழில் கேள்விக்கிடையிலான பரஸ்பரத்தை பூர்த்தி செய்வதற்கு தொழில் சந்தைகளை நடத்துவதுடன் தனியார் துறையின் ஒத்துழைப்பை பெறுவதற்கு வியாபார தொடர்புகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

அரச நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கென முப்பத்தையாயிரம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதற்கென உரிய அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மானியங்களுக்கு மேலதிகமாக பத்தாயிரம் மில்லியன் ரூபா கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அதிகமானவர்கள் ஆசிரியர்களாகவே இணைத்துக்கொள்ளப்படுவர். பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கென காணப்படும் வழக்கு நிறைவுக்கு வந்ததன் பின்னர் கிடைக்கப்பெறும் தீர்ப்பிற்கமைய தொழில்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை எடுக்கப்படும். ஏனைய ஆட்சேர்ப்பு செயற்பாடு உரிய ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கமைய இடம்பெறும்.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.

’நான் இந்த கேள்விக்கு ஏற்கனவே பதில் வழங்கிவிட்டேன். அரச கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கமைய நாம் ஆட்சேர்ப்புகளை மேற்கொள்கின்றோம். இதுவரைக் காலமும் இருந்த அரசாங்கங்களைப் போன்று நாம் நினைத்த நேரத்தில் விதிமுறைகள் இன்றி உயரமா, குள்ளமா என பார்த்து தொழில் வழங்குவதில்லை. ஒரு குறிப்பிட்ட செயன்முறை உள்ளது. அரச சேவை ஆணைக்குழு வழங்கும் தீர்மானங்கள் மற்றும் கொள்கைகளுக்கமையவே தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பது. இடம்பெறும். பரீட்சைகள், நேர்முகத் தேர்வுகள் வைத்து உரிய செயன்முறைகளை பின்பற்றி இதுவரை சுமார் பத்தாயிரம் பேருக்கு நாம் தொழில்களைப் பெற்றுக்கொடுத்துள்ளோம். தொழில் வெற்றிடங்கள் தொடர்பில் பிரதமரின் செயலாளரின் தலைமையில் குழுவொன்று இயங்குகிறது. இதனூடாக வெற்றிடங்களை அடையாளம் கண்டு தேவையான வெற்றிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்’.

பிரதமர் ஊடக பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)