வீட்டுத் தோட்டத்திற்குள் புகுந்த 9 அடி முதலை

வீட்டுத் தோட்டத்திற்குள் புகுந்த 9 அடி முதலை

வவுனியாவின் கொக் எலிய பகுதியில் உள்ள வீட்டுத் தோட்டத்திற்குள் நேற்று (05) சுமார் 9 அடி நீளமுள்ள முதலை ஒன்று நுழைந்துள்ளது.

உள்ளூர்வாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் முதலை பிடிக்கப்பட்டதாக வவுனியா வனவிலங்கு அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த முதலை உணவு தேடி தோட்டத்திற்கு வந்திருக்கலாம் என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிடிபட்ட முதலையை அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )